Tamil News Channel

அதிகரித்து வரும் டெங்கு பரவல்!

images (97)

வருடத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் இலங்கையில் 3,649 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 491, கம்பஹா 558, களுத்துறை 95 வழக்குகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள 22 மாவட்டங்கள் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் NDCU மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts