Tamil News Channel

அதீத போதையால் யாழில் இளைஞன் உயிரிழப்பு !

Alcoholism among young people - teenager drinking beer

அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ,உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞர் ஒருவர் ஆவார்.

இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார்.

அதீத போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் நாலைந்து தடவைகள் வாந்தி எடுத்து விட்டு நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பாட்டியரும் போதையில் தான் இளைஞன் படுத்துள்ளான் என நினைத்துள்ளார். ஆனாலும் நீண்ட நேரமாகியும் இளைஞன் எழும்பாததால் , இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் உயிரிழந்து சில மணி நேரம் ஆகிவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர் .

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts