தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் கல்வித் தகைமைகளை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.