அம்பாறை–கொழும்பு பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் – சாரதி உட்பட இருவர் கைது
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை தகவலின்படி, பேருந்து சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு நபர் ஆகியோர் அம்பாறை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (18) காலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைதானதுடன் பேருந்தும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து மூலமாக சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
![]()