Tamil News Channel

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களுக்கு புதிய தகவல்!

24-663b7b01ce3de

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய “சேமிப்புத் தொகையை” அவுஸ்திரேலியா அதிகாரிகள் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் அந்நாட்டு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதன்படி, வெள்ளிக்கிழமை முதல், அவுஸ்திரேலியா விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் 29,710 அவுஸ்திரேலியா டொலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் , அதேவேளை கடந்த ஒக்டோபரில், இந்தத் தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts