ஆட் பதிவுத் திணைக்களம், தனது தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகள் உட்பட அனைத்து பொதுச் சேவைகளும், நாளை (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை அன்று இடைநிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்யும் நடவடிக்கை காரணமாக இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனினும் கணினி அமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக நாளைய தினம் சேவைகள் நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே அதற்கேற்பத் திட்டமிடுமாறு குடிமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதோடு, தொழில்நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.







