ஆப்கானிஸ்தான் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு!
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, நில அதிர்வினால் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()