Tamil News Channel

Blog Post

Tamil News Channel > Top > ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!

ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!

7,880க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகமவில் புதிய பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசாங்கம் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, 45 வயதுக்குட்பட்ட, சட்டப்பூர்வ ஓய்வு மூலம் முறையாக இராணுவ சேவையை முடித்தவர்களை இலக்காகக் கொண்டுள்ளது எனவும் முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்பு கட்டமைப்பை விவரிக்கும் அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் நிலையான கால நியமனம் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொது ஒழுங்கை வலுப்படுத்துதல், வளங்களை மேம்படுத்துதல் மற்றும் பொலிஸ் துறையில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்தல், குறிப்பாக மனிதவள பற்றாக்குறை உணரப்பட்ட பகுதிகளில் ஒரு பரந்த தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் ராணுவ வீரர்களின் ஒழுக்கம், பயிற்சி மற்றும் செயல்பாட்டு அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாகவும், அதே நேரத்தில் அவர்களுக்கு பொது சேவையின் புதிய வழியை வழங்குவதற்கான ஒரு திட்டமாகவும் இந்த திட்டம் அமையும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *