இருதரப்பு தாக்குதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான், இந்தியா இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக, ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Post Views: 12