யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களும் ஒரு படகும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் 15 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும், தற்போது இராமநாதபுரம் மீன்வளத் துறைமுகத்தில் தங்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட மீனவர்கள் தாங்கள் ஒரு விபத்தை சந்தித்ததாகவும், பின்னர் மற்றொரு மீன்பிடிக் கப்பல் மூலம் இந்தியாவின் இராமநாதபுரத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இருப்பினும், குறித்த இரண்டு மீனவர்களும் பயணித்த படகில் பல கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
46 மற்றும் 54 வயதுடைய இரண்டு மீனவர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



