Tamil News Channel

இந்த ராசியினர் குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிப்பார்கள்: கடின உழைப்பே இவர்கள் தாரக மந்திரம்..!

ssssfdghj

பணம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியான ஒன்று. ஆனால், சில வேளைகளில் எவ்வளவு தான் ஓடி ஓடி உழைத்தாலும் பணத்தை அவ்வளவு எளிதாக சம்பாதித்து விட முடியாது.

அதற்கு ஒரு சிலரின் ராசி,லக்கினம், நட்சத்திரம் கூட காரணமாக அமையும்.

அதன்படி எந்தெந்த ராசியினர் விரைவாக பணக்காரர்கள் ஆகுவார்கள் எனப் பார்ப்போம்.

ரிஷபம்

சுக்கிர பகவானின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரிஷப ராசியினர், உறுதியான மனநிலையும் விடாமுயற்சியும் கொண்டவர்கள். மிகவும் அர்ப்பணிப்புடன் உழைப்பார்கள்.

திட்டமிட்டு வாழ்க்கையின் இலக்கை அடைவதற்காக போராடுவார்கள். இதனாலேயே இவர்கள் அவர்களின் வாழ்க்கையில் நினைத்த அளவுக்கு பணத்தை சம்பாதிக்க முடியும்.

சிம்மம்

சூரிய பகவானின் ஆட்சிக்குட்பட்ட சிம்ம ராசியினர், எந்தத் துறையைத் தெரிந்தெடுத்தாலும் அதில் வெற்றியடைவார்கள். இவர்களிடம் தலைமைத்துவப் பண்புகள் அதிகமாக இருக்கும்.

இதனாலேயே இவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். வாய்ப்புகள் அதிகமாவதால் சம்பாத்தியமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானால் ஆளப்படும் விருச்சிக ராசியினர், ஆற்றல்,வீரம்,வேகத்துக்கு பெயர் பெற்றவர்கள். பணத்தை சம்பாதிப்பதற்கான மதிநுட்பம் இவர்களிடம் உண்டு. இதனால் இவர்கள் இலக்கை அடைந்து வெற்றியடைகிறார்கள்.

மகர ராசி

இவர்கள் கடின உழைப்பை தாரக மந்திரமாக கொண்டிருப்பார்கள். தான் செய்யும் காரியத்தில் தோல்வி ஏற்பட்டாலும் அதைப் பற்றி சிந்திக்காது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். வரவுக்கேற்ற அளவு செலவு செய்யக்கூடியவர்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts