பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் தயாராக இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்கள் நேற்று (14) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளூராட்வித் தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு பல புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம்.

அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.

“பழைய முறை (விகிதாசார) வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில், எல்லை நிர்ணயம் தேவைக்கேற்ப செய்யப்பட வேண்டும்,”

பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனிநபர் சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த விடயத்தில் கட்சியின் எம்.ஏ. சுமந்திரன் முன்னர் ஒரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தாலும், அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதை முன்னெடுத்துச் செல்ல எந்த முயற்சியும் எடுக்காததால் அது சட்டமாக மாறவில்லை.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி, இந்த நாட்டில் ஒன்பது மாகாண சபைகள் செயல்பாட்டில் உள்ளன, மேலும் ஒன்பது மாகாண சபைகளும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநரின் ஆட்சியின் கீழ் உள்ளன.

இதற்கிடையில், பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மாகாண சபையை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here