Tamil News Channel

இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்

Capture (1)

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட  திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts