Wednesday, June 18, 2025

இன்றைய நாளுக்கான வானிலை…!

Must Read

இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்: மோதல் மேலும் தீவிரமடையுமா?

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான மோதல் மோசமாகத் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அலுவலகத்தின் தகவலின்படி, ஈரான் இதுவரை இஸ்ரேலின்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img