Tamil News Channel

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் தென்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களில் இடைக்கிடையேயும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை   தொடக்கம் புத்தளம்,  கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யகின்றமையால் பலத்த காற்று வீசுவதுடன்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts