கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு யாழில் சோகம்.!!
வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்குள் நுழைய முயற்சித்தள்ளார்.
இதன்போது காங்கேசன்துறை பக்கத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார் எனவும்.
உடனேயே அந்த இடத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார் எனவும் மேலும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் . மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
![]()