இலங்கையின் வெற்றி பயணம் தொடருமா? – புதிதாகக் கேப்டன் தலைமையில் களமிறங்கும் வங்கதேச அணி!

0
3

இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் ஆட்டம் புதன்கிழமை (இன்று) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2:00 மணிக்கு நாணய சுழற்சியுடன் ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.  இதன்படி, இலங்கை அணியினர் சரித் அசலங்கா தலைமையிலும், வங்கதேச அணியினர் மெஹிடி ஹசன் மிராஸ் தலைமையிலும் விளையாடிக்கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 16 ஓவர்கள் இலங்கை அணி துடுப்பெடுத்து ஆடியுள்ள நிலையில் 3 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றுள்ள இலங்கை, ஒரு நாள்  (50 ஓவர்) கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடரும் என்று நம்பப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடர் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில், கிவிஸுக்கு (நியூசிலாந்து) எதிராக மட்டுமே ஒருநாள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

மறுபுறம், வங்கதேசம் ஒரு நாள் (50 ஓவர்) கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 06 போட்டிகளில் தோல்வியடைந்து வருகிறது, கடந்த ஆண்டு நவம்பரில் ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதிலிருந்து ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

50 ஓவர் அணியின் பொறுப்பை நஜ்முல் ஹொசைன் சாண்டோவிடம் இருந்து ஏற்றுக்கொண்ட புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் மெஹிடி ஹசன் மிராஸின் கீழ் வங்கதேசம் புதிய பக்கத்தைத் திருப்பும் நம்பிக்கையுடன் இன்று களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here