November 18, 2025
இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் – 2025-2026 வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் – 2025-2026 வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Nov 4, 2025

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், “வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025–2026)” என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை இலங்கையில் மொத்தம் 118,697 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், 12,322 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக 400 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது இலங்கையின் சாலை மரண விகிதம் 10,000 பேருக்கு 11.2 ஆக உள்ளது — இது ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த பாதுகாப்பு எல்லையை மீறியுள்ளது.

இதனால், புதிய செயற்பாட்டுத் திட்டம் கீழ்க்கண்ட முக்கிய நோக்கங்களுடன் அமுல்படுத்தப்பட உள்ளது:

  • வீதிப் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல்

  • பாதுகாப்பான வாகனப் பயன்பாட்டை ஊக்குவித்தல்

  • வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தல்

  • அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சமமான வீதி சூழலை உருவாக்கல்

இந்த திட்டம் மூலம், நாட்டில் வீதி விபத்துகள் மற்றும் மரண எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *