இலங்கை வரவுள்ள பசில் ராஜபக்ச..!
அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் திடீர் வருகையை கட்சியின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி முழுவதையும் நாமல் ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சமாளிக்கும் நோக்கில் பசில் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பசிலை மீண்டும் அழைத்து வருவதற்கு எஸ்.எம்.சந்திரசேன உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பசில் ராஜபக்ஷவினால் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் அழிந்துவிட்டதாக கூறும் ஒரு குழுவினர், அவரது வருகைக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()