துணைத்தலைவர் சலே அல் அரூரி படுகொலை செய்யப்பட்டதற்கு குழு பதிலடி கொடுக்காவிட்டால் லெபனான் முழுவதும் அம்பலப்படுத்தப்படும் என்று லெபனான் ஆயுதக் குழுவின் தலைவர் ஹெஸ்பொல்லா கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக ஒரு தொலைக்காட்சி உரையிலே பேசிய நஸ்ரல்லா ஹெஸ்பொல்லாஹ்வின் இந்த நிலை மீறல் குறித்து அமைதியாக இருக்க முடியாது என்றும் மீண்டும் உறுதிப்படுத்தி
அல் அரூரியின் கொலைக்கு நிச்சயமாக பதிலடி மற்றும் தண்டனை இல்லாமல் போகாது என்றும் கூறினார்.
ஹெஸ்புல்லாவின் கோட்டையான பெய்ரூட்டின் தெற்கு புற நகர் பகுதியில் செவ்வாயன்று இஸ்ரேலிய தாக்குதலில் அல் அரூரி கொல்லப்பட்டார்.
லெபனான் அல் அரூரியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளித்துள்ளனர்
இந்நிலையில் நஸ்ரல்லா இது அந்நாட்டின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களின் ‘ ஆபத்தான கட்டம் ‘ என்று கூறியுள்ளார்.
மேலும் அல் அரூரியை கொன்ற தாக்குதலில் இஸ்ரேல் ஆறு ஏவுகணைகளை பயன்படுத்தியதாகவும் சிரியா மீது குண்டு வீசுவதற்கு லெபனான் வான் வெளியை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் புகாரளித்துள்ளதாக ஜனவரி 4 திகதியிட்ட வெளியிட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.