November 18, 2025
இஸ்ரேல் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி..!

Feb 13, 2024

ரஃபாவில் நகர் மற்றும் பல பகுதிகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபாவை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமான தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செம்பிறை சமூகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலில் அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்கான வளங்கள் இல்லை என அபு யூசெவ் அல் நிஜார் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரஃபா மருத்துவமனைக்குள் குழப்பமான நிலை காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும், யப்னா முகாமில் இரண்டு மசூதிகள் தாக்கப்பட்டதில் அங்கு தஞ்சமடைந்திருந்த பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குவைத் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *