முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நேற்று(15) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேரூந்து ஒன்று சிலாவத்தை சந்திக்கு , அண்மித்த போது பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் , குறித்த பஸ் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்.

குறித்த விபத்தில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here