செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நேற்றையதினம் பாகிஸ்தான் ஈரானுக்குள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் என ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள “பயங்கரவாதிகளின் மறைவிடங்களை” தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது.
ஈரான் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறியது.
இஸ்ரேல் காசாவில் ஹமாஸுடன் சண்டையிட்டு வருவதுடன் லெபனானில் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லாவுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் அமெரிக்க படைகளை குறிவைக்கின்றன, மேலும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதிகளை தாக்கியுள்ளன.