February 7, 2026
ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில்: உரையாடலா? அல்லது நீண்டகாலப் போரா?
World News உலக அரசியல் புதிய செய்திகள்

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில்: உரையாடலா? அல்லது நீண்டகாலப் போரா?

Jun 21, 2025

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

இந்த வேளையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்‌சி, “ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது” என்றும், “தனது நாடு ராஜதந்திரத்திற்கு திறந்தே உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறைவடைய வேண்டும் என்பது அவரது கண்டிப்பாகும்.

இதற்கிடையே, இஸ்ரேலின் இராணுவத் தளபதி இயல் ஜமீர், “ஈரானுக்கு எதிரான ஒரு நீண்டகாலப் போருக்கு நாடு தயாராக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடரும் தாக்குதல்கள் பெரும்பாலான உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

அமைதி, உரையாடல், மற்றும் மக்கள் நலன்களை முன்னிறுத்தும் நாடுகள், இந்த மோதல் மேலும் தீவிரமடையாமல், நிலைத்த அமைதி ஒன்றை நோக்கி நகரக்கூடிய வகையில் இரு தரப்புகளும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *