உக்ரைனுக்கு பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா முடிவு – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Patriot Air Defense Systems) அனுப்பும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இவ் அமைப்புகள் நேரடியாக அல்லாது, முதலில் நேட்டோவிற்கு (NATO) அனுப்பப்பட்ட பின்னர், அவை உக்ரைனுக்கு மாற்றப்பட்டு வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர சமாதான கலந்துரையாடலை ஏற்படுத்த ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை, ரஷ்ய ஜனாதிபதி எதிர்த்திருப்பது காரணமாக, ட்ரம்ப் இந்த விடயத்தில் அதிருப்தி அடைந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவுடன் உள்ள உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடிய அபாயம் இருப்பதாக சில விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
![]()