July 8, 2025
உணவுப் பிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்..!
News News Line Top Updates புதிய செய்திகள் வர்த்தகம்

உணவுப் பிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்..!

Mar 5, 2024

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக  உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் 05 ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் உணவுப்பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நேற்று முன்தினம் அந்த சங்கம் தீர்மானித்திருந்தது.

இருப்பினும்  உணவுப்பொருட்களின் விலையினை இந்த வாரத்தில் மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *