ஆடவர் மரதன் ஓட்டப் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்டும் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் 24 வயதான கெல்வின் கிப்டும் மற்றும் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டைச் சேர்ந்த கர்வைஸ் ஹகிசமானாவும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தில் 42 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலம் 35 விநாடிகளில் பூர்த்தி செய்து கெல்வின் கிப்டும் உலக சாதனை படைத்திருந்தார்.

மேலும், இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மரதன் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here