July 8, 2025
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரொஷான் ரணசிங்க…
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரொஷான் ரணசிங்க…

Aug 5, 2024

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இனி இடமில்லை எனவும் புதிய வேலைத்திட்டத்துடன் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்றும், பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்தவர்கள் இருப்பதாகவும், அத்தகைய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் எந்த மாவட்டத்தில் இருந்தும் சுதந்திரமாக நின்று என்னால் பாராளுமன்றம் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *