July 14, 2025
எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயார்..!
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயார்..!

Mar 27, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டில் அடுத்து என்ன தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு   தயாராகவே உள்ளது என நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், இடதுசாரிக் கட்சிகள் தேர்தலின்போது ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மே தினக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பற்றியே இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு – கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *