January 23, 2026
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் நெருக்கடியா?
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் நெருக்கடியா?

Jul 9, 2025

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எரிபொருள் போக்குவரத்தை ஏகபோகத்திற்கு உட்படுத்தும் முயற்சி நடப்பதாகக் கூறினார்.

மேலும் “இந்த நேரத்தில், பவுசர் உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இதுவரை, பவுசர் வாகனங்களிலிருந்து தொகை களஞ்சியசாலைகளை எரிபொருளை எடுத்து சென்றது எங்கள் பவுசர் உரிமையாளர்களே.

ஏனென்றால் நாங்கள் இலங்கையில் முக்கிய போக்குவரத்து சேவையாக இருக்கிறோம்.

நாங்கள் எரிபொருளை எடுத்துச் செல்லாவிட்டால், வேறு யாருக்கும் எரிபொருள் கிடைக்காது.

ஆனால் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக, இந்த வணிகம் இரண்டு அல்லது மூன்று நெருங்கிய வணிகர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாங்கள் ஒரு சங்கமாக தலையிட்டு சிறிது காலம் அதை நிறுத்தி வைத்திருந்தோம்.

ஆனால் தற்போது, இந்த போக்குவரத்து சேவையை தமது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் ஒப்படைக்க முயற்சிக்கின்றனர்.

ஒன்று அல்லது இரண்டு பவுசர்களை வைத்திருக்கும் பவுசர் உரிமையாளர்கள்தான் இந்த தொழிலில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சங்கத்தில் சுமார் 400-500 பவுசர் உரிமையாளர்கள் உள்ளனர்.

ஆனால் முன்னோடி திட்டமாக, கொழும்பு மற்றும் முத்துராஜவெலவிலிருந்து குருநாகல் முனையத்திற்கு எரிபொருள் கொண்டு செல்வதை டெண்டர் மூலம் ஒரு வியாபாரியிடம் ஒப்படைக்க முயற்சிக்கின்றனர்.

இது தொடர்ந்தால், இறுதியில் ஏனைய போக்குவரத்து சேவைகளை போன்றே இதற்கும் நேரும்.

எனவே, இதை உடனடியாக நிறுத்திவிட்டு, வழக்கம் போல் ஏகபோகத்திற்கு உட்படுத்தப்படுவதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கான சேவையாக போக்குவரத்து சேவைகளை இயக்க அனுமதிக்கவும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *