ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பனிக்கட்டி ஒன்றில் உறைந்த நிலையில் எலி ஒன்று கண்டறிப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் முதல் தெருவோர கடைகள் வரைவிநியோகிக்கப்படும் இந்த ஐஸ் கட்டிகளில் செத்த எலி இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
குறித்த சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உள்ளிட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த ஐஸ் கட்டிகள் விநியோகம் செய்யப்பட்ட இடங்கள், ஐஸ்கட்டி தொழிற்சாலைகள் உட்பட தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
![]()