February 7, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

Aug 17, 2024

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபராவார்.

சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் மற்றும் 250 மில்லி கிராம்  ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *