ஜின்தோட்டையில் உள்ள கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வெளியே இன்று அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி 38 வயதுடைய நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருந்துவத்த பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், போதைப்பொருள் பொட்டலத்தால் தூண்டப்பட்டதாக நம்பப்படும் வாக்குவாதத்தின் போது தாக்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரும், தற்போது காவலில் உள்ள 28 வயதுடைய தாக்குதலாளியும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.



