December 9, 2025
காணாமல்போன யுவதி சடலமாக மீட்பு…
Updates புதிய செய்திகள்

காணாமல்போன யுவதி சடலமாக மீட்பு…

Dec 1, 2023

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான யுவதி சடலமாக 5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவத்தில் வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையை சேர்ந்த 24 வயது யுவதியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

யுவதி காணாமல்போனதாக இரு தினங்களுக்கு முன்னர் யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனால்,பொலிஸ் நாயின் உதவியுடன் பொலிஸார் சடலத்தை கண்டுப்பிடித்துள்ளனர்.இந்நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *