Tamil News Channel

காதல் விவகாரம் : கழுத்தறுத்து யுவதியை கொன்ற இளைஞர்

காதல் விவகாரம் தொடர்பில் ஹோமாகம பிரதேசத்தில் ஹோமாகம நீதிமன்ற வீதியில் இன்று புதன்கிழமை (08) காலை யுவதி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, அவரது ஆடையில் காணப்பட்ட இரத்த கறையால் சந்தேகமடைந்ந வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை ஆண்டர்ன் வீதியை சேர்ந்த நபர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுத்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts