கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பெளஷர் ஒன்று தடண்புரண்டது.
இச் சம்பவம் இன்று அதிகாலை 1.மணிக்கு இடம்பெற்றுள்ளது.
முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன் துறை நோக்கி பூநகரி வீதியால் டீசல் ஏற்றி பயணித்த பெளசரே விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பெருமளவான டீசல் வெளியேறியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)



