Tamil News Channel

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் பதவியேற்பு!

IMG-20240704-WA0046

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ரூபாவதி கேதீஸ்வரன் ஓய்வுபெற்றதுடன் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ்.முரளிதரன் பிரதி ஆளுநராக கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் 03.07.2024 அன்று பிரதமர் தினேஷ் குணரத்ன இவருக்கான நியமனத்தை நேற்று வழங்கியிருந்தார்.

புதிய நியமனத்தை பொறுப்பேற்க வருகை தந்த புதிய முதலமைச்சரை, பிள்ளையார் கோவிலில் இருந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து மங்கள வாத்தியங்களுடன் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அவர் தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts