July 14, 2025
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக அரசரட்ணம் பங்கையற்ச்செல்வன் !
புதிய செய்திகள்

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக அரசரட்ணம் பங்கையற்ச்செல்வன் !

Jun 24, 2024

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக அரசரட்ணம் பங்கையற்ச்செல்வன் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி வடக்கு வலயத்திலுள்ள 1AB பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய அதிபர் ஓய்வு பெற்ற நிலையில் முருகானந்தா கல்லூரிக்கு புதிய அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய அதிபருக்கு  பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து வரவேற்பு நிகழ்வை நடத்திவைத்தனர்.

இதனை தொடர்ந்து அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *