Tamil News Channel

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு..! 

FB_IMG_1745489522695

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தன்னாமுனை வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரை காரியாலயமானது தன்னாமுனை பிரதான வீதியில் வேட்பாளர் லியோ ஜெகராசா நிராஜ் எல்மோ தலைமையில் நேற்றைய தினம் (23/04/2025) திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், முற்போக்கு தமிழர் கழகத்தின் செயலாளர் யோகநாதன் றொஸ்மன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் தன்னாமுனை வட்டார மேலதிக வேட்பாளர் யூட்ஸ் ஹம்ஸத்வனி அவர்கள் பங்குபற்றிய இருந்ததுடன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts