நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான், ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகத்தை கொடுப்பார்.
இதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு குருபகவான் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடத்தை மாற்றினார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தது.
இதனை தொடர்ந்து, பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கு இருக்கும்.
அந்த வகையில், குரு பகவான் மிதுன ராசிக்கு இடம்பெயர்வதால் ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.