Tamil News Channel

குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்…..

cricket campion

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்டிருந்த தகவலையும் அழித்துள்ளதாக கூறப்படுவதுடன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அவருக்கு 2024 ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts