Tamil News Channel

கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா?

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் முற்றிலும் கரைய ஒரே ஒரு பொருள் மட்டும் போதுமாம். அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நில வேம்பு

காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் நில வேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

நாட்டு மருந்து கடைகளில் நிலவேம்பு பொடியினை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகின்றது.

மேலும் இந்த பொடியுடன் நில வேம்பு மட்டும் இருப்பதில்லையாம். இதனுடன் வெட்டி வேர், கோரைக்கிழங்கு, கருப்பு மிளகு, இஞ்சி போன்ற பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்படுகின்றதாம்.

நாள் ஒன்றிற்கு 60 மில்லி நிலவேம்பு கஷாயத்தை குடிக்கலாம் என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகின்றது.

உடம்பில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பு சேர்வதை தடுப்பதுடன், மேலும் எந்தவொரு நோயையும் வராமல் தடுக்கின்றது. நிலவேம்பில் துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது.

சருமத்தை பளபளப்பாகவும், பிரகாசமாகவும் வைத்திருப்பதுடன், ரத்த சோகையிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது. அதிலும் காலை வெறும்வயிற்றில் இதனை குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறுகின்றது.

கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும், மூட்டு வலி பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கின்றது.

புற்றுநோயினை எதிர்த்து போராடவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், இன்சுலின் சுரப்பை தூண்டவும் நிலவேம்பு கஷாயம் உதவுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts