Tamil News Channel

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

colombo 2

கொழும்பு, பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில், நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்று (08) நுவரெலியா – கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக தபால்  ஊழியர் சங்கத்தினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென வீதிக்கு குறுக்கே சென்று அமர்ந்து கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால், ஏராளமான பொலிஸார்  மற்றும் கலகத் தடுப்பு பொலிஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு  அத்துடன் , நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts