கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நேற்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் அவிசாவளையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 12 வயது மகளும் 44 வயதுடைய ஆணும் அடங்குவர் என கூறப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் சந்தேக நபர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



