Tamil News Channel

சஜித்துடன் இணைந்த 20 இலட்சம் உறுப்பினர்கள்…!

m1

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக 20 இலட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்பினர்கள் அதிகளவில் திரண்டதால் உறுப்பினர் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, “10 நாட்களில் 20 இலட்சம்” வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், பத்து நாட்கள் அல்லாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அரசியல் பயணத்தை பிரபல குழுவுடன் ஆரம்பித்துள்ளார். எனவே, பெரும்பான்மையான மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை நோக்கி வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது என்றும், அது மக்கள் பிரதிநிதிகளுடனான ஒப்பந்தம் அல்ல. இந்த ஒப்பந்தத்தில் தமது கட்சி முன்னணியில் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts