Tamil News Channel

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்..!

poraattam thaijiddi

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று (22) ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டமானது இன்று (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த  போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts