November 13, 2025
சனி பகவானின் பார்வையால் தாறுமாறாக அடி வாங்கப்போகும் ராசிகள் யார் யார் தெரியுமா?
ஜோதிடம்

சனி பகவானின் பார்வையால் தாறுமாறாக அடி வாங்கப்போகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

Jul 9, 2024

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அந்த வகையில் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார்.

இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.

மேஷம்

சனிபகவானின் பின்னோக்கிய பயணத்தால் சில ராசிகள் துன்பத்தை அனுபவிக்க உள்ளது.அதில் இந்த ராசியும் ஒன்றாக உள்ளது.காலநிலை மாற்றத்தால் உங்களுக்கு முன்பு இருந்ததை விட சிக்கல்கள் அதிகமாக இருக்கும்.

சிறு சிறு விஷயங்களும் உங்களுக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தப்படும். மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிறிய வேலைகளாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று தாமதமாகும்.

நிதி இழப்புகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

துலாம்

சினி பகவானின் இந்த வக்ர பயணம் உங்கள் வாழ்வில் பல சங்கடத்தை ஏற்படுத்த உள்ளது.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை துணையிடம் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தை மந்தமான சூழ்நிலை இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தற்போது தலையிடாமல் இருப்பது நல்லது.

சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்

இந்த சனிப்பெயர்ச்சியின் காரணமாக பல சிக்கல்கள் உங்களை தேடி வரும்.தற்போது உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையவில்லை எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எந்த சிக்கல்களாக இருந்தாலும் பொறுமையாக முடிவெடுத்து செயல்படுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை மற்றவர்களிடம் தடுக்க வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை துணையோடு அமைதியாக இருப்பது நல்லது. புதிய வேலைகளை தற்போது தொடங்காமல் இருப்பது நல்லது. அவசர அவசரமாக செய்யக்கூடிய காரியங்களை தற்போது தவிர்ப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *