Tamil News Channel

சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞர் கைது…!

arrestttt

ஜானாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தமையால் கொள்ளுப்பிட்டி  பொலிஸார் குறித்த இளைஞரை  கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்  என்பதுடன்  இவரிடமிருந்து கையடக்க தொலைபேசியும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் 44 வயதுடைய நபர்ரொருவருடன் துபாய் தூதரகத்திற்கு வருகை தந்தவர் எனவும், இதற்கு முன் இவ்வாறான வாகன தொடரை கண்டதில்லை என்பதால்   கையடக்கதொலைபேசியில்  காணொளி எடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts