யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக் கழகங்களில் இயங்கி வருகின்ற சித்த மருத்துவ கற்கைகளை சித்த மருத்துவ பீடங்களாக தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான நடடிவடிக்கைகளை மேற்கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கி வரும் சித்த மருத்துவ கற்கை நெறிகளை சித்த மருத்துவ பீடங்களாக தரமுயர்த்தி வளங்களை அதிகரிப்பதன் மூலம், எமது பிரதேசங்களில் தரமான சுதேச மருத்துவ பாரம்பரியத்தை கட்டமைக்க முடியுமெனவும் சுட்டிக் காட்டியிருந்தார்.








