சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது.
இந்நிலையில், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அல்லது அது தொடர்பாக திட்டம் ஏற்படுத்துவதைத் தவிர உலக வங்கிக்கு எந்த பங்கும் இல்லை.
உலக வங்கி எப்படி இந்த பிரச்சினையில் தலையிட்டு சரி செய்யும் என்பது குறித்து பல ஊடகங்களில் பல யூகங்கள் வருகின்றன. ஆனால், அவை அனைத்தும் கற்பனையே. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Post Views: 4